loader
கொரோனா: 1,335 புதிய சம்பவங்கள் பதிவு! இருவர் மரணம்!

கொரோனா: 1,335 புதிய சம்பவங்கள் பதிவு! இருவர் மரணம்!

புத்ராஜெயா டிசம்பர் 6 -நாட்டில் இன்று 1,335 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72, 694 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூரில் 337 சம்பவங்களும், நெகிரி செம்பிலானில்  258 சம்பவங்களும், சபாவில் 250 சம்பவங்களும், கோலாலம்பூரில் 178 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

இன்று 1,069 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61, 273 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த் தொற்றினால் இன்று இருவர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில்  11, 039  பேர் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் தற்போது 126 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 57 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News