loader
கொரோனா: 1,123 புதிய சம்பவங்கள் பதிவு!

கொரோனா: 1,123 புதிய சம்பவங்கள் பதிவு!

புத்ராஜெயா டிசம்பர் 5 - நாட்டில் இன்று 1,123  புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 71, 359 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

கோலாலம்பூரில் மட்டும் 256 சம்பவங்கள்  பதிவாகியுள்ளன. 

இன்று 1,143 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 69, 204 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த் தொற்றினால் இன்று நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில்  10, 775  பேர் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் தற்போது 130 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 54 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது!
 

0 Comments

leave a reply

Recent News