loader
ஸ்தம்பித்தது டெல்லி! எச்சரிக்கும் விவசாயிகள்! அதிர்ச்சியில் இந்தியா!

ஸ்தம்பித்தது டெல்லி! எச்சரிக்கும் விவசாயிகள்! அதிர்ச்சியில் இந்தியா!

புதுடெல்லி: இந்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் இன்று 10 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ஆம் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லைகளில் மக்கள் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது.

திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளைப் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால் அண்டை மாநிலங்களுடனான தொடர்பை டெல்லி இழந்து வருகிறது. குறிப்பாக அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்குச் செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்காகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட பாதுகாப்பு அளிப்பதற்காகவும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறும் மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறுகையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில், எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். குறிப்பாக டிசம்பர் 8-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்திருக்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

அன்றைய தினம் அனைத்து சாலைகளின் சுங்கச்சாவடிகளையும் நாங்கள் முற்றுகையிடுவோம் என கூறிய விவசாயிகள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் வருகிற நாட்களில் அடைப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே டெல்லி எல்லைகளில் குழுமியிருக்கும் விவசாயிகளால் தினந்தோறும் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து முடங்கி வருகிறது. இதனால் போக்குவரத்து அடைக்கப்பட்டுள்ள சாலைகள், மாற்று ஏற்பாடுகள் போன்றவை குறித்து டெல்லி போலீசார் தினமும் தங்கள் டுவிட்டர் தளத்தில் மக்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தால் டெல்லி முழுவதும் குழப்பமும், பரபரப்பும் நிலவி வரும் நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது!

0 Comments

leave a reply

Recent News