அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, வரும் 2021-ஆம் ஆண்டு தேர்தலிலும் அதிசயம் நடக்கும் என்றும், தான் முதல்வர் ஆவேன் என்றும் சூசகமாக ரஜினி கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில், ஆம்! அதிசயம் நிகழும். 'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதிகமாக ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம், இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம், அற்புதம் 2021-ல் நடக்கும், நடந்தே தீரும் என்று விமர்சித்துள்ளார்!
0 Comments