பேராக் மாநில அரசாங்கம் இன்று கவிழ்ந்தது. பேராக் மாநில மந்திரி பெசார் அகமட் பைசால் அஸுமு தலைமையிலான பேராக் மாநில ஆட்சிக்கு எதிராக, இன்று காலையில் பேராக் மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து பேராக் அரசு கவிழ்ந்தது.
மந்திரி பெசார் அகமட் பைசால் அஸுமுவிற்கு எதிராக 48 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வேளையில்,10 வாக்குகள் அவருக்கு ஆதரவாகப் பதிவாகியிருந்தன.
இதில் ஒரு வாக்கு செல்லாத வாக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான முடிவை ஏற்றுக்கொள்வதாக அகமட் பைசால் அஸுமு தெரிவித்துள்ளார்!
0 Comments