loader
கொரோனா: 1,075 புதிய சம்பவங்கள் பதிவு! 11 பேர் மரணம்!

கொரோனா: 1,075 புதிய சம்பவங்கள் பதிவு! 11 பேர் மரணம்!

நாட்டில் இன்று 1,075  புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 69, 095 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூரில் அதிகமான சம்பவங்கள்  பதிவாகியுள்ளன.  சிலாங்கூரில் மட்டும் 459 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சபாவில் 310 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று 948 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57, 917ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த்தொற்றினால் இன்று 11 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 376 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில்  10, 802 பேர் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றனர்.

116 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 46 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News