loader
டாக்சி ஓட்டுனர்  பிரச்னை!  மேலவையில்  கேள்வி எழுப்புவேன்! - டத்தோ டி. மோகன்

டாக்சி ஓட்டுனர் பிரச்னை! மேலவையில் கேள்வி எழுப்புவேன்! - டத்தோ டி. மோகன்

 

(வெற்றி விக்டர் - பார்த்திபன்)

கோவிட்-19 காலகட்டத்தில்  மீனவர்களுக்கு கிடைத்தது போல், தங்களுக்கு  எந்த ஒரு சலுகையும் கிடைக்கவில்லை என  மலேசிய டாக்சி ஓட்டுனர்கள், தங்களது  ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தனர்.

இது தொடர்பாக செனட்டர் டத்தோ டி .மோகனிடன் கருத்துக் கேட்டபோது, டாக்சி ஓட்டுனர் பிரச்னை பேசப்படவேண்டிய பிரச்னையாக இருந்தபோதிலும், காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு கிரேப் ஓட்டுவது போல் அதற்கு வேண்டிய உதவிகள் தொடர்பாக நிச்சயம்  ஒரு திட்டம் தீட்டலாம்.

மீனவர்களுக்குக் கிடைத்த உதவி நிதி போல் டாக்சி ஓட்டுனர்களுக்கும் அரசு சார்பில் இருந்து உதவிகள் கிடைக்க வேண்டும். இது தொடர்பாக நிச்சயம் நான் மேலவையில் கேள்வி எழுப்புவேன் என டத்தோ டி. மோகன்  நம்பிக்கை தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News