(வெற்றி விக்டர் - பார்த்திபன்)
இரண்டாவது முறையாக மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட செனட்டர் டத்தோ டி.மோகனுக்கு, இன்று பாராட்டுவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 2021 பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டு நிதி குறைக்கப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இது தேசிய முன்னணி ஆட்சி அல்ல என டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.
தேசிய முன்னணி ஆட்சியில் இதற்காகச் சிறப்பு திட்டவரைவு அமைக்கப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. அது கடந்த காலம். இப்போது பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியிலும் அது தொடரவேண்டும் என அண்மையில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப்பும் வலியுறுத்தினார்.
ஆனால், ம.இ.கா நிச்சயம் இதற்கு ஒரு சிறந்த தீர்வினைக் காணும். தேசியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்களுடன் இணைந்து நானும் நிச்சயம் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கூடுதல் நிதி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என டத்தோ டி. மோகன் உறுதியளித்தார்!
0 Comments