கொரோனா:
1,472 புதிய சம்பவங்கள் பதிவு!
மூவர் மரணம்!
நாட்டில் இன்று 1,472 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67, 169 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மேலும் இன்று ஒரே நாளில் 1,552 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56, 311 ஆக உயர்ந்துள்ளது.
இந்நோய்த்தொற்றினால் இன்று மூவர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 363 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் 10,495 பேர் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றனர்.
120 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 44 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது!
0 Comments