கோலாலம்பூர், டிசம்பர் 1- KWSP அனைத்து கிளைகளும் நாளை முதல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 முதல் மாலை 4.30 வரை அனைத்து அலுவல் நாள்களிலும் சேமநிதி வாரியத்தின் எல்லாக் கிளைகளும் திறந்திருக்கும்.
இதற்காக முன்னதாகவே ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.kwsp.gov.my/janjitemu என்ற அகப்பக்கத்தின் வழி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அலுவலகத்திற்கு வருகை புரிகின்றவர்கள் எஸ்.ஓ.பி. நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் விளக்கங்களைப் பெற, 03-8922 6000 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும், அல்லது www.kwsp.gov.my இணையத்தளம் வாயிலாகத் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!
0 Comments