loader
கொரோனா இன்று 1,212 சம்பவங்கள்! மூவர் மரணம்!

கொரோனா இன்று 1,212 சம்பவங்கள்! மூவர் மரணம்!

கொரோனா:
1,212 புதிய சம்பவங்கள் பதிவு!
மூவர் மரணம்!

நாட்டில் இன்று 1,212  புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65, 697ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூரில் அதிகபட்சமாக 402 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சபாவில் 326 சம்பவங்களும், நெகிரி செம்பிலானில் 141 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மேலும் இன்று ஒரே நாளில்  2,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54, 759ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த்தொற்றினால் இன்று மூவர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில்  10,578  பேர் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றனர்.

113 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 42 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது!

 

0 Comments

leave a reply

Recent News