ஆடம்பர போலீஸ் அதிகாரிகள் கண்காணிக்கப்படுவர்!
கோலாலம்பூர், 29 நவம்பர் - ஆடம்பர வாழ்க்கையை வாழும் போலீஸ் அதிகாரிகள் கண்காணிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில போலீஸ் அதிகாரிகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளப்படுவது குறித்துப் பொதுமக்களிடையே பல கேள்விகளும் எழுந்துள்ள் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல் துறையில் நம்பகத்தன்மையை நிலைநாட்டவும், போலீஸ் உறுப்பினர்களிடையே இதுபோன்ற குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக புக்கிட் அமான் உயர்நெறி மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் டத்தோ ஸம்ரி யாஹ்யா தெரிவித்தார்.
அரசு ஊழியர்களாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள், போலீஸ் துறையின் நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில், இதுபோன்ற தவறுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.
ஆடம்பர வாகனங்கள், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று கோல்ஃப் விளையாடுவது என சில போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்!
0 Comments