ஈப்போவில் வெள்ளப் பெருக்கு!
ஈப்போ: ஈப்போவில் பெய்து வரும் தொடர் கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை மழைக்காலமாக இருந்தாலும், இந்த முறை மழையின் அளவு மிக அதிகமாக உள்ளதாக ஈப்போ மாநகர கவுன்சிலர் டாக்டர் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சராசரியாக 90 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆனால் இவ்வாண்டு அதை விட அதிகமாக 140 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஈப்போவில் உள்ள வடிகால் அமைப்பால், இவ்வளவு பெரிய அளவிலான தண்ணீர் பெருக்கைச் சமாளிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குள்ள நதிகளை ஆழமாக்குவதற்கும், மழைக்காலத்திற்கு முன்னர் நீரின் ஓட்டத்தைத் தடுக்கக்கூடிய அனைத்து குப்பை மற்றும் மரக் கிளைகளைச் சுத்தம் செய்வதற்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்!
0 Comments