கொரோனா:
1,309 புதிய சம்பவங்கள் பதிவு!
மூவர் மரணம்!
நாட்டில் இன்று 1,309 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64, 485ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
கோலாலம்பூரில் அதிகபட்சமாக 493 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சபாவில் 290 சம்பவங்களும், சிலாங்கூரில் 238 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மேலும் இன்று ஒரே நாளில் 1,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52, 647 ஆக உயர்ந்துள்ளது.
இந்நோய்த்தொற்றினால் இன்று மூவர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் 11, 481 பேர் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றனர்.
116 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 42 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது!
0 Comments