loader
கொரோனா: 1,315 புதிய சம்பவங்கள் பதிவு! நால்வர் மரணம்!

கொரோனா: 1,315 புதிய சம்பவங்கள் பதிவு! நால்வர் மரணம்!

நாட்டில் இன்று 1,315  புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63,176 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சபாவில் அதிகபட்சமாக 476 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சிலாங்கூரில் 266 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் இன்று ஒரே நாளில்  1,110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 51, 314 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த்தொற்றினால் இன்று நால்வர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 354 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில்  11, 508 பேர் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றனர்.

118 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 43 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது!





 

0 Comments

leave a reply

Recent News