loader
கொரோனா: 1,109 புதிய சம்பவங்கள் பதிவு! இருவர் மரணம்!

கொரோனா: 1,109 புதிய சம்பவங்கள் பதிவு! இருவர் மரணம்!

புத்ராஜெயா, நம்பர் 27- நாட்டில் இன்று 1,109  புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,861 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சபாவில் அதிகபட்சமாக 441 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சிலாங்கூரில் 175 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் இன்று ஒரே நாளில்  1,148 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50, 204 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த்தொற்றினால் இன்று இருவர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை 11, 307 ஆகக் குறைந்துள்ளது.

தற்போது, ​​113 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 41 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது.




 

 

0 Comments

leave a reply

Recent News