loader
கொரோனா: 2,555 பேர் இன்று குணம் பெற்று வீடு திரும்பினர்! 935 புதிய சம்பவங்கள் பதிவு!

கொரோனா: 2,555 பேர் இன்று குணம் பெற்று வீடு திரும்பினர்! 935 புதிய சம்பவங்கள் பதிவு!

புத்ரா ஜெயா, நவம்பர் 26 -

நாட்டில் இன்று 935  புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சபாவில் மட்டும் அதிக எண்ணிக்கையாக 326 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 2,555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49,056 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இந்நோய்த்தொற்றினால் இன்று மூவர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 348 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை 11, 348 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் இதுவரைக்கும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60, 752 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, ​​110 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 45 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது!



 

0 Comments

leave a reply

Recent News