கோலாலம்பூர், நவம்பர் 25 - பெர்னாமாவின் புதிய தலைவராக ராஸ் அடிபா முகமட் ரட்ஸினை தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைஃபுடின் அப்துல்லா நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மேலவை செனட்டரும், மூத்த தொலைகாட்சி பிரபலமுமான ராஸ் அடிபா முகமட் ரட்ஸி இன்று காலை 11.30 மணியளவில் பெர்னாமா அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
பெர்னாமாவின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மொக்தார் உசேன் மற்றும் பெர்னாமாவின் சில மூத்த நிர்வாக ஊழியர்கள் அவரை வரவேற்றனர்.
கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி பதவி விலகிய சுஹைமி சுலைமானுக்குப் பதிலாக, பெர்னாமாவின் வாரியத் தலைவர் பதவிக்கு ராஸ் அடிபா முகமட் ரட்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்!
0 Comments