கோலாலம்பூர், நவம்பர் 24-
2021ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், பெரிய அளவிலான பாதிப்பு இந்தியர்களுக்குத்தான் என்று பரவலாகப் பேசப்பட்ட நிலையில், தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்கு 29.98 மில்லியன் நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது எமாற்றத்தை அளிக்கிறது என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 50 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கல்வி அமைச்சரின் புதிய வீயூக நடவடிக்கையால் தமிழ்ப்பள்ளிக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வேதனையான விஷயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப்பள்ளிக்கான ஒதுக்கீட்டில் இருந்து 20 மில்லியன் குறைக்கப்பட்டிருப்பது இந்தியச் சமுதாயத்திற்கு பெரிய ஏமாற்றம் என்றும், பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் நியாயமற்ற இத்தகைய முடிவை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்!
0 Comments