வாஷிங்டன்: கொரோனா உயிர்க்கொல்லி, மற்ற எந்த நாடுகளையும் விட அமெரிக்காவைத்தான் அதிகமாகத் தாக்கி வருகிறது. உலகிலேயே அதிகளவு பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா தொடர்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.
ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்கள் முதல் சில்லரை வர்த்தக அலுவலகங்கள் வரை மூடப்பட்டு உள்ளது. இதனால் பலதரப்பட்ட மக்கள் தங்களின் அன்றாட வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்.
கடந்த வார இறுதியில் 7 லட்சத்து 11 ஆயிரம் பேர் வேலை இழந்த நிலையில், தற்போது 7 லட்சத்து 42 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் டிசம்பர் மாதம் வேலையிலா திண்டாட்டத்தால் 12 மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள் என அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்காவிற்கே இந்நிலை என்பதால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.
0 Comments