loader
தீபாவளிக்கு உள்நாட்டுப் பொருள்களையே பயன்படுத்துங்கள்! - மோடி

தீபாவளிக்கு உள்நாட்டுப் பொருள்களையே பயன்படுத்துங்கள்! - மோடி

புதுடெல்லி:  இந்தத் தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள். ‘தீபாவளிக்கு உள்நாட்டு பொருட்கள்’ என்ற இந்த கோஷம் எங்கும் எதிரொலிக்க வேண்டும். உள்நாட்டு பொருட்கள் வாங்குவதால், உள்நாட்டு அடையாளம் வலுப்படுவதுடன், அப்பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு தீபாவளி ஒளிமயமாகும்.

உள்நாட்டு பொருட்களுடன் தீபாவளி கொண்டாடும்போது, பொருளாதாரமும் வலுவடையும். எனவே, பெருமையுடன் உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள் என இந்திய பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ளார்.

ஒவ்வொருவரும் உள்நாட்டு பொருட்களை வாங்கும்போது, அவை நன்றாக இருப்பதாக மற்றவர்களிடம் சொல்லுங்கள். அதன்மூலம் இந்த செய்தி பரவும்.

வெறும் விளக்கு மட்டுமல்ல, தீபாவளிக்கு என்னென்ன பொருட்களை பயன்படுத்துவீர்களோ, அவற்றை உள்நாட்டு பொருட்களாக வாங்கினால், அவற்றை தயாரிப்பவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதற்காக ஏற்கனவே உள்ள பொருட்களை கங்கை ஆற்றில் வீசி எறிய வேண்டும் என்று அர்த்தம் அல்ல என்று மோடி தெரிவித்துள்ளார்!

 

0 Comments

leave a reply

Recent News