loader
கொரோனா: இன்று 871 சம்பவங்கள்! எழுவர் மரணம்!

கொரோனா: இன்று 871 சம்பவங்கள்! எழுவர் மரணம்!

புத்ராஜெயா: இன்று ஞாயிற்றுக்கிழமை (அக். 18)  871 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதில் 866 சம்பவங்கள் உள்ளூரில் பரவியதாகும். 5 வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

சபாவில் அதிகபட்சமாக 702 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று 701 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டின் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 20, 498 ஆகும்.

இன்று 7 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதன் மூலம் மொத்தம் 187 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன!

0 Comments

leave a reply

Recent News