புத்ராஜெயா: இன்று ஞாயிற்றுக்கிழமை (அக். 18) 871 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இதில் 866 சம்பவங்கள் உள்ளூரில் பரவியதாகும். 5 வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
சபாவில் அதிகபட்சமாக 702 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இன்று 701 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டின் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 20, 498 ஆகும்.
இன்று 7 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதன் மூலம் மொத்தம் 187 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன!
0 Comments