பெட்டாலிங் ஜெயா: கிள்ளான், ஷா ஆலம் மற்றும் கோலா லங்காட் மாவட்டங்களில் உள்ள 59 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்கல் சனிக்கிழமை (அக். 17) காலை 10 மணிக்குள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் டேங்கர்கள் வசதியும் செய்து கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷா ஆலமில் உள்ள ஒரு குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தத் தடை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதே போன்று வெடிப்பு ஏற்பட்டு கிள்ளானில் பதினைந்து இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது!
0 Comments