புத்ராஜெயா: இன்று வியாழக்கிழமை (அக். 15) 589 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் வெளியேற்றப்பட்டதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
சபாவில் அதிகபட்சமாக 340 நோய்த்தொற்றுகளும், சிலாங்கூரில் 150 மற்றும் பேராக்கில் 52 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.
மூன்று சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். - மீதமுள்ளவை அனைத்தும் உள்ளூர் பரிமாற்றங்கள்.
இதுவரைக்கும் இந்நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 12,014 ஆகும்.
நாட்டின் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 18,129 ஆகும்.
தற்போது 103 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 31 பேருக்கு வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது.
மேலும், இன்று மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன, இதன் மூலம் இப்போது 170 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மூன்று இறப்புகளும் சபாவில் நிகழ்ந்தவை ஆகும்.
இறந்தவர்கள் 54 முதல் 100 வயதுக்கு உட்பட்டவர்கள்!
0 Comments