கோலாலம்பூர்: இன்று மொத்தம் 561 கொரோனா சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன.
561 புதிய சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 15, 657 ஆக உயர்ந்துள்ளது.
சபாவில் அதிகமாக 488 சம்பவங்களும்,கெடாவில் 16 சம்பவங்களும், சிலாங்கூரில் 26 சம்பவங்களும், கோலாலம்பூரில் 15 சம்பவங்களும் பதிவாகி உள்ளன.
தற்போது 4,587 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 90 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 29 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று புதிதாக 2 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது!
0 Comments