loader
கொரோனா இன்று 354 சம்பவங்கள்! அறுவர் மரணம்!

கொரோனா இன்று 354 சம்பவங்கள்! அறுவர் மரணம்!


கோலாலம்பூர், அக் 9: நாட்டில் இன்று 354 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆறு பேர் மரணமடைந்துள்ளனர்.

இருப்பினும், 188 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,707- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதுவரைக்கும் நாட்டில் பதிவான மொத்த கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை 14,772 ஆகும்.

இதில், 3,863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 68 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 25 பேருக்கு சுவாசக்கருவி உதவி தேவைப்படுகிறது.

இன்று புதிதாக ஆறு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 152- ஆக அதிகரித்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News