பூச்சோங், அக். 8-
ஜி.வி.நாயர் வாழை இலை உணவகங்களின் உரிமையாளரும், நாடறிந்த கொடை நெஞ்சருமான டத்தோஸ்ரீ ஜி.வி.நாயரின் பிறந்தநாள் விழா பூச்சோங்கில் உள்ள எம் 3 ஹோட்டலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
டத்தோஸ்ரீ ஜி.வி.நாயரின் நண்பர்கள், அவரது தொழில் சார்ந்த பிரமுகர்கள் உட்பட, அனைவரும் இணைந்து இந்தப் பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்.
வாழ்க்கையில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எல்லா சூழலிலும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் சிறந்தது என்று கூறிய அவர், தமக்காக பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தப் பிறந்தநாள் விழாவைத் தவிர்த்து நாடுதழுவிய நிலையில் பல்வேறு பகுதிகளில் தம்முடைய ஆதரவாளர்கள் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர் தெரிவித்தார்!
0 Comments