ரவாங், அக். 8-
பூசாட் பண்டார் மஇகா கிளையின் ஏற்பாட்டில் கம்போங் சுங்கை சோ பகுதியில் துப்புரவுப் பணி நடவடிக்கை மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது.
படுமோசமான சூழலில் இருந்த சுற்றுப்புறம், இந்த நடவடிக்கையால் தூய்மையாக்கப்பட்டது என்று பூசாட் பன்டார் ரவாங் மஇகா கிளைத் தலைவர் ஒய்.எஸ்.மகேந்திரன் தெரிவித்தார்.
மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், உலு சிலாங்கூர் தொகுதித் தலைவரும் ஆசிரியருமான பாலசுந்தரம், குவாங் கிளைத் தலைவர் எஸ்.எஸ்.சிவராஜன் ஆகியோர் உட்பட எஸ்.எஸ்.துளசி கௌரிக்கும் தங்களது நன்றியைப் பதிவு செய்து கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கு கொண்டிருந்தனர். அவர்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மகேந்திரன் குறிப்பிட்டார்!
0 Comments