கோலாலம்பூர், அக் 6: இது வரை இல்லாத உச்சமாக நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 691 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் நாட்டின் கொரொனா சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 13,504 சம்பவங்களாக உயர்ந்துள்ளது.
இன்று பதிவு செய்யப்பட்ட 691 சம்பவங்களில், 688 உள்ளூரில் பரவியது ஆகும். கெடாவில் 397 பேரும், சபாவில் 219 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலாங்கூரில் இன்று 38 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று நான்கு பேர் மரணமுற்ற நிலையில், மரணம் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், நாளை புதன்கிழமை தொடங்கி சபாவில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்துள்ளார்!
0 Comments