(வெற்றி விக்டர்)
'பிக் பாஸ் சீசன் 4' நேற்று தொடங்கப்பட்ட நிலையில்... யார் போட்டியளார்கள் என ரசிகர்கள் காத்திருந்த தருணத்தில், தமிழைக் காக்கவும், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும இந்தத் தலைமுறையினரிடம் வாசிக்கும் பழக்கத்தை உயிர்ப்பிக்கவும் உலக நாயகன் கமல் ஹாசன் எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது.
அதிலும் வாரம் ஒரு புத்தகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக கமல் ஹாசன் கூறியுள்ளது உண்மையில் எழுத்துத் துறையினரை ஊக்கப்படுத்தும்.
மலேசியாவிலும் நிறையபேர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைக் கண்டுக்களிக்கின்றனர். இந்த நவீன தொழில்நுட்பம் இங்கு உள்ள மக்களிடையிலும் வாசிப்புப் பழக்கத்தை குறைத்துவிட்டது. பல எழுத்தாளர்களின் எழுத்தும் வாசகர் இன்றி மெலிந்து விட்டது. வாசிப்புப் பழக்கம் அவசியமானது. அதை வளர்ப்போம் எழுத்துத் துறையைக் காப்போம்!
0 Comments