கோத்தாகினபாலு, செப் 26: காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்), வாரிசான் பிளாசிடமிருந்து சபா மாநில ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக, பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் இன்று இரவு அறிவித்துள்ளார். பெரிகாத்தான் நேஷனல், தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ் கூட்டணி 37 தொகுதிகளைக் கடந்துவிட்டது என்று அவர் கூறினார்.
அதிகாரப்பூர்வமற்ற முறையில் நாங்கள் மாநிலத்தை கைப்பற்றப் போகிறோம். ஆனால், காத்திருக்கவும் என்று இன்று இரவு தேசிய கூட்டணி தேர்தல் தலைமையகத்தில் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி வாரிசான் பிளாஸ் 22 தொகுதிகளிலும், தேசிய கூட்டணி, தேசிய முன்னணி 37 தொகுதிகளிலும், சுயேச்சை 2 தொகுதிகள், உஸ்னோ ஒரு தொகுதியிலும் முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன!
0 Comments