கோலாலம்பூர்: அம்னோவுடன் கூட்டணி அமைப்பது சரியானது அல்ல என்று முகைதீன் யாசினை தாம் எச்சரித்ததாக மகாதீர் தெரிவித்துள்ளார்.
அன்வார் இப்ராஹிம் தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவைக் கொண்டுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தை உருவாக்க அன்வார் தயாராக உள்ளார் என்ற கூற்றுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் மகாதீர் இதனைக் கூறினார்.
மேலும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அறிக்கையில் நம்பிக்கை இல்லை என்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கருத்து கூறியுள்ளார்.
தமக்கு வலுவான மற்றும் உறுதியான பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் அவருக்கு ஆதரவாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
தமது பிரதிநிதிகளின் ஆதரவை முதலில் மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடினிடம் ஒப்படைப்பது மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறியுள்ளார்!
0 Comments