loader
வீடுகளை உடைக்காதீர்! - பிரபாகரன்

வீடுகளை உடைக்காதீர்! - பிரபாகரன்

கோலாலம்பூர் செ-24

கடந்த ஓராண்டு காலமாக ஸ்தாபாக்  ஜாலான் லாங்க புக்கிட் பகுதி வாழ்  மக்களின் வீட்டுப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு பிறக்காத பட்சத்தில், இன்று திடீர் என்று மேம்பாட்டு நிறுவனத்தினர் போலீஸ் பாதுகாப்புடனும் இயந்திரங்களுடனும்  அங்குள்ள வீடுகளை உடைக்க முற்பட்டனர். இதனையடுத்து குடியிருப்பாளர்கள் மற்றும் மேம்பாட்டளர்கள் இடையே வாக்குவாதம் மூண்டதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தெரிவித்தார்.

காலை 9 மணியளவில் இங்குள்ள வீடுகள் உடைக்கப்படுகிறது என்ற தகவல் அறிந்து, தாம் இங்கு வந்ததாகவும்  மேம்பாட்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரபாகரன் தெரிவித்தார்.

இங்கு வாழும் மக்களுக்கு பி.பி.ஆர் குடியிருப்பு வீடுகள் கிடைக்கும் வரை, அவர்களின் வீடுகளை உடைக்கவேண்டாம் எனத் தாமும் மக்களும் மேம்பாட்டு நிறுவனத்திடம்  கேட்டுக்கொண்டதாக  பிரபாகரன் கூறினார். 

இங்கு 10 வீடுகள் உள்ள நிலையில், 14 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இதில் சிலருக்கு பி.பி.ஆர் வீடுகள் கிடைக்கப்பெற்று  மாறிச் சென்ற நிலையில் இன்னும் சிலருக்கு பி.பி.ஆர் வீடுகள் இன்னும் கிடைக்கவில்லை. இத்தருணத்தில் மேம்பாட்டு நிறுவனம் வீடுகளை உடைக்க முற்படுவது சரியான அணுகுமுறை இல்லை என பிரபாகரன் கூறினார்.

மக்களுக்கு கால அவகாசத்தை மேம்பாட்டு நிறுவனம் வழங்கவேண்டும். அதுவரை வீடுகளை உடைக்கும் முயற்சியைக் கைவிடவேண்டும் என பிரபாகரன் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில், பேச்சு வார்த்தைக்குப் பிறகு காலியான வீடுகளை மட்டும் மேம்பாட்டு நிறுவனம் உடைத்தனர். இருந்த போதிலும், அப்பகுதி மக்கள் இன்னும் பீதியில் தான் இருக்கிறார்கள். கோலாலம்பூர் மாநகர மன்றம் எங்களுக்கு விரைந்து  பி.பி.ஆர் வீடுகளை வழங்கவேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டனர்!

0 Comments

leave a reply

Recent News