கோலாலம்பூர், செப் 16: நாட்டில் 62 சம்பவங்கள் இன்று பதிவாகியுள்ளன.
புதிய சம்பவங்களைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,031 சம்பவங்களாக அதிகரித்துள்ளது.
இதுவரையில் 9,235 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 26 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.
தற்போது 668 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் வெண்டிலேடர் தேவைப்படக் கூடியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
0 Comments