loader
தொகுதி பங்கீட்டில் சிக்கல்! பிரதமர் ஏமாற்றம்!

தொகுதி பங்கீட்டில் சிக்கல்! பிரதமர் ஏமாற்றம்!

சபா தேர்தலில் தேசிய கூட்டணி, பாரிசான் மற்றும் பிபிஎஸ் ஆகிய அரசியல் கூட்டணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பாரிசான் மற்றும் பிபிஎஸ் கட்சிகள் ஆரம்பத்தில் அறிவித்த வேட்பாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமான வேட்பாளர்களை நிறுத்தி தங்கள் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை மீறியுள்ளன.

சபா தேர்தலில் 29 இடங்களுக்கு போட்டியிடுவதாக உறுதியளித்த தேசிய கூட்டணி (பி.என்.) மட்டுமே வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து தனது வாக்குறுதியைக் கடைப்பிடித்துள்ளது.

பிபிஎஸ் 15 வேட்பாளர்களை நிறுத்துவதாக உறுதியளித்தது, ஆனால் இப்போது 22 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாரிசான் 40 வேட்பாளர்களை நிறுத்துவதாக உறுதியளித்தது, இறுதியில் இந்த எண்ணிக்கை 41 வேட்பாளர்களாக அதிகரித்தது.

இதனையடுத்து 11 இடங்களில் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் கடைசி முயற்சியில் பிரதமர் முகைதீன் கோத்தா கினாபாலுவுக்கு வருகையளித்தது பயனற்றுப் போனது!

0 Comments

leave a reply

Recent News