loader
சபா தேர்தல்! சூத்திரதாரி மூசா அமான் போட்டியிடவில்லை!

சபா தேர்தல்! சூத்திரதாரி மூசா அமான் போட்டியிடவில்லை!

கோத்தா கினபாலு, செப் 12 : சபா மாநில தேர்தல் வரும் செப்டம்பர் 26- ஆம் தேதி நடைபெறும் வேளையில் அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்றது. ஆனால், சபா சட்டமன்றத் தேர்தலுக்குச் சூத்திரதாரியாக இருந்த மூசா அமான் தனது தொகுதியில்  போட்டியிடாமல் அதிர்ச்சி காட்டியுள்ளார்.

33 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, ஷாபி அப்டாலின் இரண்டு ஆண்டு கால ஆட்சியைக் கவிழ்க்க கடந்த  ஜூலை மாதம் மூசா அமான் முற்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே சபா மாநில முதல்வர் ஷாபி அப்டால் ஆட்சியைக் கலைத்து அதிரடி காட்டினார்.

இந்நிலையில் அவர் தனது தொகுதியான சுங்கை சிபுங்காவில் போட்டியிடவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. தேசிய முன்னணி – அம்னோ கூட்டணி வேட்பாளர் பட்டியலிலும், தேசியக் கூட்டணி வேட்பாளர் பட்டியலிலும் மூசா அமான் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் புதிய சட்டமன்றத் தொகுதியான சுங்கை மணிலா தொகுதியில் போட்டியிட ஆர்வம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்ட ரீதியாக இத்தேர்தலை நிறுத்துவதற்கும் நீதிமன்றப் போராட்டங்களை அவர் நடத்தினார். எனினும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன!

0 Comments

leave a reply

Recent News