கோலாலம்பூர், செப் 11: இன்று கொரோனா தொற்றின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இந்த ஒரு நாளில் பதிவாகியிருக்கிறது.
இன்றைய இந்தப் புதிய சம்பவங்களில் 167 சபாவின் தாவாவ், லகாட் டத்து வட்டாரங்களில் ஏற்பட்டவையாகும் என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பான மரணம் ஏதும் நிகழவில்லை என்பதும் ஆறுதலான ஓர் அம்சமாகும்.
இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கோவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,810 ஆக உயர்ந்துள்ளது. இதில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,181 ஆகும்!
0 Comments