கோலாலம்பூர், செப் 8: கொரோனா தொற்றுச் சம்பவங்கள் இன்று 100 எண்ணிக்கையை எட்டியது. இதன் மூலமாக, நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 9,559-ஆக உயர்ந்தது.
62 சம்பவங்கள் நேற்று பதிவானதை அடுத்து, இன்று மேலும் அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் இல்லாத மிகப் பெரிய தொற்று எண்ணிக்கை இதுவாகுன்.
இன்றைய, தொற்று சம்பவங்களில் 85 சம்பவங்கள் உள்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 15 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்!
.
0 Comments