கோலாலம்பூர், செப் 7: நாட்டில் 62 புதிய கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான பதிவு இதுவாகும் என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த 62 சம்பவங்களில் 56 பேர் உள்நாட்டிலேயே பாதிக்கப்பட்டவர்கள் என்றும், எஞ்சிய 6 பேர் வெளிநாட்டிலிருந்து தொற்று கண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுளது.
கடந்த ஜூன் 4-ஆம் தேதிதான் மிக அதிகமாக ஒரே நாளில் 277 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் 10-ஆம் தேதி முதற்கொண்டு RMCO அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நாட்டின் மொத்த கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை 9,459 ஆக உயர்ந்துள்ளது. இதில் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,124 ஆகும்.
மரண எண்ணிக்கை தொடர்ந்து 128 ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது!
0 Comments