loader
‘ராகா ஐடல்’ பாடல் திறன் போட்டி!  சிறந்த 5 போட்டியாளர்கள் தேர்வு!

‘ராகா ஐடல்’ பாடல் திறன் போட்டி! சிறந்த 5 போட்டியாளர்கள் தேர்வு!

‘ராகா ஐடல்’ பாடல் திறன் போட்டியின் சிறந்த 5 போட்டியாளர்கள் ஆகஸ் 24 முதல் 31 ஆகஸ்ட் 2020 வரை நடைப்பெற்ற இணைய வாக்களிப்புகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தப் போட்டியாளர்கள் பெறப்பட்ட சுமார் 700 விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிறந்த 5 போட்டியாளர்களான கமலி கண்ணன், சக்தீஸ்வர் சண்முகவேலாயுதம், தர்ஷினி முரளி, அமோஸ் போல் முருகேஷ் மற்றும் யுவனேஷ் முனியாண்டி ஆகியோர் 6 செப்டம்பர் 2020, மாலை 3 மணிக்கு நடைபெறும் இறுதிச் சுற்றில் களமிறங்கி போட்டியிடுவர். ராகாவின் முகநூல் நேரலை வழியாக ரசிகர்கள் இறுதிச் சுற்றை ஸ்ட்ரீம் செய்யலாம்.
இறுதிச் சுற்றில் அதிக மதிப்பெண்களைப் பெறும் மூன்று போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு மொத்தம் RM 3500 ரொக்கப் பரிசை வெல்வர்.
பிரபல உள்ளூர் இசை இயக்குநர்களான சுந்தரா, ஜெய் மற்றும் போய் ராட்ஜ் உடன் ஒரு பாடலைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பையும் வெற்றியாளர்கள் பெறுவர்!

0 Comments

leave a reply

Recent News