சென்னை: கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நேற்று மாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் ஹெச். வசந்தகுமாருக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவரது உடல்நிலை மோசமடைந்து, நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 70.
காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஹெச். வசந்தகுமாா் (70), கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். இவரது நோ்முக உதவியாளா் போத்திராஜுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வசந்தகுமாா் எம்.பி., அவரது மனைவி தமிழ்ச்செல்வி (61) ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில், அவா்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது 10-ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இருவரும் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். வசந்தகுமாரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததை அடுத்து, செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவர் உயிரிழந்தார்!
0 Comments