loader
பெர்சாத்துவில் அஸ்மின் அலி & குழுவினர்!

பெர்சாத்துவில் அஸ்மின் அலி & குழுவினர்!

கோலாலம்பூர்; ஆகஸ்ட் 22: – பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தமது  குழுவினருடன் அதிகாரப்பூர்வமாக பெர்சாத்து கட்சியில் இணைவதாக இன்று தெரிவித்துள்ளார்.

தலைநகர் ஜாலான் டூத்தாவில் உள்ள அனைத்துலக வாணிப, கண்காட்சி மையத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நெகாரா எனும் நிகழ்வில் அஸ்மின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமது ஆதரவாளர்கள் அனைவரும் பிரதமர் முகைதீன் யாசினின் தலைமைத்துவத்தை ஏற்று இன்று முதல் பெர்சாத்து கட்சியில் இணைவதாக அவர் அறிவித்தார்.

அஸ்மினின் அறிவிப்புக்குப் பின்னர் அவரது பெர்சாத்து கட்சி உறுப்பினர் அட்டையை முகைதீன் யாசின் அவருக்கு வழங்கினார்.

இந்நிலையில், மலாய்க்காரர் அல்லாதவர்களும் பெர்சாத்துவில் இணையலாம் என்றும், அவர்களுக்கு உயர் பதவிகள் வழங்குவதற்கான  திருத்தங்கள் பெர்சாத்துவில் கொண்டுவரப்படும் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் அறிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News