கோலாலம்பூர் - ஆகஸ்ட் 21:-
பிரதமர் முகைதீன் யாசின், அன்வார் இப்ராகிம் மற்றும் முன்னாள் பிரதமர் நஜீப் ஆகியோரால் மலேசியாவின் இறையாண்மையை வலுப்படுத்த முடியாது என்று டாக்டர் மகாதீர் முகமட் இன்று தெரிவித்துள்ளார்.
யூடியூப் நேர்காணலில் இளைஞர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.
அன்வாரின் நல்ல குணங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு, அன்வார் இலட்சியமிக்கவர் என்று மகாதீர் கூறினார்.
தாம் அவரை ஏற்றுக்கொண்டதோடு, துணைப் பிரதமராக அமரச் செய்ததாக மகாதீர் தெரிவித்தார்.
மேலும் நஜிப்பை ஒரு திறமையான தலைவர் என்றும் மகாதீர் வர்ணித்தார். இருப்பினும், முன்னாள் பிரதமர் பணத்தை வழங்குவதன் மூலம் மக்களிடையே புகழ் பெற்ற விதம் ஒரு தலைவருக்குப் பொருத்தமற்றது என்று அவர் கூறினார்!
0 Comments