கோலாலம்பூர்: நாடு முழுவதும் சுமார் ஐந்து மில்லியன் மாணவர்களுக்கு முகக்கவசங்களை புத்ராஜெயா விநியோகிக்கவிருப்பதாக வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1 முதல் பொது இடங்களில் கட்டாயமாக்கப்பட்ட முகக்கவசங்களை வாங்குவதில் பெற்றோரின் செலவுகளைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று அவர் கூறினார்.
மறுமுறை பயன்படுத்தும் இவ்வகை முகக்கவசங்கள் பாதுகாப்பானவ என்றும் அவர் கூறினார்.
ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள், தாபிஸ் பள்ளிகள் மற்றும் மதரஸாக்களுக்கு முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும் என்று அவர் கூறினார்!
0 Comments