loader
கொரோனா: இன்று 12 புதிய சம்பவங்கள்!

கொரோனா: இன்று 12 புதிய சம்பவங்கள்!

கோலாலம்பூர்: ஆகஸ்ட் 17 -

மலேசியாவில் இன்று கோவிட் -19 தொடர்பில்  12 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில தாவர் மற்றும் சாலா கிளஸ்டர்களைச் சேர்ந்தவை என சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மலேசியாவில் இதுவரையில் மொத்தம் 9,212 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 96.4 சதவீதம் அல்லது 8,876 வழக்குகள் ஏற்கனவே முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 211 வழக்குகள் இன்னும் சிகிச்சையில் உள்ளன. மேலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 125 ஆக உள்ளது. 

சிகிச்சை பெற்று வரும் 211 வழக்குகளில், எட்டு நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர், அவர்களில் இரண்டு பேருக்கு வெண்டிலேட்டர் வசதி தேவைப்படுகிறது.

இன்று பதிவு செய்யப்பட்டுள்ள 12 புதிய கோவிட் -19 சம்பவங்களில், இரண்டு கோலாலம்பூரில் முறையே சிரியா மற்றும் பிலிப்பைன்ஸிலிருந்து திரும்பி வந்த வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஆகும்.  மீதமுள்ள 10 வழக்குகள் மலேசியர்களை உள்ளடக்கியது ஆகும்!

 

0 Comments

leave a reply

Recent News