கோலாலம்பூர்: பினாங்கு, முன்னாள் நிதியமைச்சரும், முதலமைச்சருமான லிம் குவன் எங் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்குப் பின்னர் வெறும் பலகையில் படுத்து உறங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் எப்படி பலகை படுக்கையில் தூங்கினார் என்பதையும், 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்குகளில் தடுத்து வைக்கப்பட்டபோது நஜில் இது போல் நடத்தப்படவில்லை என்பதையும் நினைவு கூர்ந்துள்ளார்.
ஆரஞ்சு உடையில் ஒரு குறுகிய சிறையில், மெத்தை தலையணை எதுவும் இல்லாமல் வெறும் பலகையில்தான் படுத்து உறங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமது மனைவி பெட்டி சியூவும் பினாங்கில் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டார் என்பதைக் கண்டு தான் ஏமாற்றமடைந்ததாகவும், அதே விஷயத்தை அவர் எதிர்கொள்வார் என்ற கவலையில் இருந்ததாகவும் லிம் கூறியுள்ளார்.
தேசிய கூட்டணி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாகவும் லிம் கூறியுள்ளார்!
0 Comments