கோலாலம்பூர்; ஆகஸ்ட் 7: பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து தனித்து இருந்த மகாதீர், தற்போது புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆயினும், அதற்கான பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
இப்புதிய கட்சிக்கு முக்ரிஸ் மகாதீர் தலைவராக இருப்பார் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்சி எந்தவொரு கட்சியுடனும் பிணைக்கப்படாது என்றும், ஊழலை ஒழிப்பதற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்றும் மகாதீர் கூறியுள்ளார்!
0 Comments