கோத்தா கினபாலு, ஜூலை: 29 - ஷபி அப்டால் தலைமையிலான சபா மாநில அரசாங்கம் விரைவில் கவிழும் என, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் தெரிவித்துள்ளார்.
சில கூட்டணி கட்சிகள் மூலம் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெற்றிருப்பதாக அவர் கூறினார்.
இதன் தொடர்பில், கூடிய விரைவில் அம்மாநிலத்தின் சில சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, மாநில ஆளுநர், துன் ஜுஹார் மஹிருடினை சந்திக்கவிருப்பதாகவும் மூசா அமான் தெரிவித்திருக்கிறார்.
தாம் தலைமையேற்கவிருக்கும், கூட்டணிக்கு ஆதரவாக தங்களின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சில சட்டமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண உறுதிமொழிக் கடிதத்தையும் தாம் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சபாவில் தற்போது 65 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
தேசிய முன்னணி ஆட்சியின் போது மாநில முதலமைச்சராக இருந்த மூசா, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மாநில சட்டசபையில் குறைந்தது 33 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும்!
0 Comments