கொரோனா கிருமித் தொற்று தொடர்பில் நாட்டில் இன்று 39 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 11 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து மலேசியத் திரும்பியவர்கள் சம்பந்தப்பட்டதாகும். 28 பேர் உள்ளூர் பிரஜைகள் சம்பந்தப்பட்டதாகும்.
இது வரை நாட்டில் கொரோனா கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,943 பேர் ஆகும்.
இந்நோய்த் தொற்றினால் மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 124 ஆகும்.
தற்போது 212 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்!
0 Comments