கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் மக்களின் ஆதரவோடு நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சியின் சமீபத்திய நிலைப்பாடு, ஷரியா சட்ட விவகாரம் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
அம்னோ - பாஸ் இடையேயான கூட்டணி தங்களுக்கு நன்மையைத் தரும் என்று அரசியல் பார்வையாளர்கள் நம்புவதாக அவர் கூறினார்.
சட்டம் 355- ஐ நடைமுறைப்படுத்த விரும்பியதால் பாஸ் மக்கள் கூட்டணியை விட்டு வெளியேறியது. ஆனால், அரசாங்கத்தில் ஒரு பகுதியாக மாறிய பின்னர், பாஸ் அமைச்சர்கள் அம்னோ மற்றும் மசீச ஆகியோரிடமிருந்து வரும் கருத்துகளையே பேசுகிறார்கள் என்று குறிப்பிட்ட அன்வார், அடுத்தத் தேர்தலில் வெற்றிபெறுவோம் எனக் கூறினார்!
0 Comments